அனர்த்தத்தினால் நிர்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரணப்பணியில் யூனியன் அஷ்யூரன்ஷ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு, மழை அனர்த்தத்தினால் நிர்கதியாகியுள்ள மக்களுக்காக யூனியன் அஷ்யூரன்ஷ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றோர் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும்பணி நாளை காலை 8.30மணி முதல் இடம்பெறவுள்ளது.

இப்பணி வாழைச்சேனை தொடக்கம் மட்டக்களப்பு நகர் வரை இடம்பெறவுள்ளதாக யூனியன் அஷ்யூரன்ஷ் நிறுவனத்தின் கிழக்கு வலய முகாமையாளர் முகாமையாளர் ம.ஜெகவண்ணன் தெரிவித்தார்.

இவ் நிவாரணங்கள் சேகரிப்புப் பணியில் இணைந்துகொண்டு பொருட்களை வழங்கிவைக்குமாறு இவ் அமைப்பினர் அனைவரையும் கேட்டக்கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு : யூனியன் அஷ்யூரன்ஷ் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர்
பிரதீப் வசந்த் -   077 36600 88,
யூனியன் அஷ்யூரன்ஷ் கிழக்கு வலய ஆட்சேர்ப்பு முகாமையாளர் - A.நிரோஷன் - 077 44122 66
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் - 075 6210 231