க.பொ.த (சா.தர) மாணவர்களுக்கான துரிதமீட்டல்


சாம்பல்த்தீவு தமிழ் மகாவித்தியாலயம் ,சல்லி அம்பாள் மகாவித்தியாலயம்,ஆத்திமோட்டை வித்தியாலயம்,பாரதி வித்தியாலயம்,மாதுமை அம்பாள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் க.பொ.தசாதாரணதரத்தில்  கல்விபயிலும் மாணவர்களின் நலன் கருதி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசெயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான பாடங்களுக்கான துரித மீட்டல்  முன்னோடிக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழவு இன்று காலை சாம்பல்த்தீவு தமழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சசிதேவிஜலதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.விஜேந்திரன் சிறப்பித்ததுடன்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள்  கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  ஆகியோரும் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது