ஊறணியில் அம்பியூலஸ் மோட்டார் சைக்கள் மோதி விபத்து ஒருவர் பலி மற்றோருவர் படுகாயம்

மட்டக்களப்பு ஊறணியில் மோட்டார் சைக்கிளுடன் அம்பியூலஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி ஊறணியைக் கடந்து வாவிக்கரை வீதியால் செல்லும்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

சுப்பர் கப் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த இருவரில் ஒருவரான எஸ். டானியல் (வயது 44) என்பவர் சிகிச்சை பயனளிக்காமல் மரணமானதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
படுகாயமடைந்தவர்களில் மற்றையவரான மைக்கல் அஞ்சலோ (வயது 49) என்பவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பலியானவரும் படுகாயமடைந்தவரும் மட்டக்களப்பு சின்னஊறணியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்புப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.