காரைதீவில் கீரி மீன்கள்: அட்டாளைச்சேனையில் பாரை மீன்கள்

(வி.ரி.சகாதேவராஜா)
 நீண்ட காலத்திற்கு பிறகு அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு கடற்கரையில் அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. அதேவேளை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெருமளவிலான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.இப் பெருமளவிலான  மீன்களை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். இது சுனாமிக்கான அறிகுறியாக இருக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர். அதன்போதான படங்களை இங்கு காணலாம்.