பாடும் மீன்களின் சமர் மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமானது

(எமது நிருபர்கள்)
மட்டு நகரின் மிகவும் பிரபலமான பாடசாலைகளான வின்சன்ட் மகளீர் உயர்தர ​தேசிய பாடசாலைக்கும் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்குமான பாடும் மீன்களின் சமர் எனப்படும் கிறிக்கட் போட்டி சிவானந்தா மைதானத்தில் ஆரம்பமானது.

முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிசிலியா பெண்கள் தேசியபாடசாலை அணித்தலைவி தனது அணியை களத்தடுப்பில் ஈடுபடுமாறு பணித்து இருந்தார் .

செலான் வங்கி மற்றும் வின்சன்ட் உயர்தர பாசாலையின் பழைய மாணவர்சங்கம் கனடாக்கிளையின் அனுசரனையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.