2014 நவம்பர் முதல் அரச ஊழியர்களுக்கு ரூபா.3,000 இடைக்காலக் கொடுப்பனவு! சுற்றறிக்கை.

சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 2015 வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 3,000/= இடைக்காலக் கொடுப்பனவு வழங்கல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

பதவி நிலை சாராத ஊழியர்களுக்கும்இசகல ஆசிரியர்,அதிபர்களுக்கும்   2015.06.30 வரை இந்த இடைக்காலக் கொடுப்பனவு கிடைக்கும் . பின்னர் .2015.07.01 தொடக்கம் நிலுவையுடன் புதிய சம்பளம் கிடைக்கும்

பதவி நிலை உத்தியோகஸ்தர்களுக்கு( 22,955/= ஆரம்பச் சம்பளத்தைக் கொண்டவர்களுக்கு) 2015.08.31 வரை இது வழங்கப்படும். இவர்களுக்கு 2015.09.01 தொடக்கம் நிலுவையுடன் புதிய சம்பளம் கிடைக்க உள்ளது.பிற விபரங்களை கீழே பதியப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கண்டு கொள்ளலாம்.