ஆசியுரையை மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் சதுர்புஜானந்தாஜீ வழங்கினார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்து கொண்டார். அத்துடன் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் வி.குகதாசன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.மேகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆண்டு விழா நிகழ்வில், சாரதா முன்பள்ளி மாணவர்களின் நடனம், நாடகம், பேச்சு, உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.