(சிவம்)
பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை, மீரியபெத்தைத் தோட்டப் பிரதேசங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக மட்டக்களப்பு வர்த்த சங்கத்தினர் ஒரு தொகைப் பணத்தை இன்று சனிக்கிழமை (01)மாவட்ட அரச அதிபரிடம் மாவட்டச் செயலகத்தில் வைத்துக் கையளித்தனர்.
.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எஸ். அமிர்தலிங்கம், மட்டக்களப்பு வர்த்த சம்மேளனத் தலைவர் எம். செல்வராசா மற்றும் வர்த்த சங்கப் பிரதிநிதிகள் அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ்சிடம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.