அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து மருத்துவக் குழுவினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிட்சை


(சிவம்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிட்சைளுக்கான விசேட கிளினிக் 24.11.2014 திங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இடம்பெறவுள்ளதால் அன்றைய தினமே இச்சிகிட்சை பெறவிரும்புபவர்கள் பதிவு செய்யுமாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிட்சைப் பிரிவின் வைத்திய அதிகாரி கே. ஜெயசுதன் தெரிவித்தார்.

மறு நாள் 25.11.2014 செவ்வாய் முதல் தெரிவு செய்யப்படவர்களுக்கான சத்திர சிகிட்சைகள்  04.12.2014 வியாழன் வரை இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.

சுகாதார அமைச்சின் அழைப்பிற்கிணங்க அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் இச்சிகிட்சையை நடாத்தவுள்ளனர்.

உடம்பில் ஏற்பட்ட எரிகாயங்கள், உளத் தாக்கத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்கள், பிளவுபட்ட உதடுகள், விகாரமடைந்த முகங்களை உடையவர்கள் சிகிட்சைகளைப் பெறமுடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.

மேலதிக விபரங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டள்ளது.