ஒரு பிள்ளைக்கு ஒரு மரம் நாளைக்காய் உலகை பாதுகாப்போம்

(படுவான் பாலகன்) வேள்ட்விஸன் பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தி திட்டமும், உக்டா நிறுவனமும் இணைந்து “ஒரு பிள்ளைக்கு ஒரு மரம் நாளைக்காய் உலகை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குகின்ற நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நேற்று(22) சனிக்கிழமை இடம்பெற்றது.


இங்கு போது பயன்தரக்கூடிய பழமரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர், பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராமசேவை உத்தியோகத்தர்கள், உக்டா நிறுவன அங்கத்தவர்கள், சிறுவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.