மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு


(சிவம்)

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 48 பிரிவுகளிலும் கடமைபுரியும் கிராம சேவையாளர்கள் இன்று திங்கட்கிழமை (17) தங்களது பிரதேசங்களுக்குச் சென்று சேவையைச் செய்யாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் கூளாவடி மதுபானச் சாலையின் உரிமையாளர் ஒருவரால் கிராசேவகர் தாக்கபட்டும் அவரது கமெரா மற்றும் செலூலர் போன் என்பன சேதமாக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும் அவருக்கான நீதி வேண்டியும், தங்களது பிரிவுகளுக்கு சென்று கடமை புரிய அச்சமாக உள்ளதாக மாவட்ட அரச அதிபர் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவித்து விட்டு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகக் கூறினர்.

தாங்கள் பிரதேச செயலகத்தின் முன் இருந்து நாடிவருவோருக்கான அத்தியாவசிய சேவைகளை மட்டும் புரிவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.