(எஸ்.சதீஸ்)
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரையோரப்பகுதிகளின் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதியில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
தற்போழுது பெய்துவரும் மழை காரணமாக ஆற்று வெள்ளம் கடலை நோக்கி ஓடாததன் காரணத்தால் கரைநிலப் பகுதிக்கு பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணத்தினால் கரையோரக் கிராமங்களான கொத்தியாபுலை, கரையாக்கந்தீவு, மகிழவட்டவான், கரவெட்டி,வவுணதீவு போன்ற கிராமங்களிலுள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மட்டக்களப்பு நகரையும் படுவான்கரை பகுதியையும் இணைக்கும் வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகினால் சுமார் இரண்டுஅடி தண்ணீர் பரவிப் பாய்கின்றதன் காரணத்தினால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரையோரப்பகுதிகளின் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதியில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
தற்போழுது பெய்துவரும் மழை காரணமாக ஆற்று வெள்ளம் கடலை நோக்கி ஓடாததன் காரணத்தால் கரைநிலப் பகுதிக்கு பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணத்தினால் கரையோரக் கிராமங்களான கொத்தியாபுலை, கரையாக்கந்தீவு, மகிழவட்டவான், கரவெட்டி,வவுணதீவு போன்ற கிராமங்களிலுள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மட்டக்களப்பு நகரையும் படுவான்கரை பகுதியையும் இணைக்கும் வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகினால் சுமார் இரண்டுஅடி தண்ணீர் பரவிப் பாய்கின்றதன் காரணத்தினால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டதனால் விரைவில் இந் நிலமைகள் சீராகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.