கனணிகற்கை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கலும், புதிய கணனிகள் கையளிக்கும் நிகழ்வும்

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கணனி கற்கை நெறியினை கனணிகற்கை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கலும், புதிய கணனிகள் கையளிக்கும் நிகழ்வும் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்குகின்ற நிகழ்வும், இக்கணினி கற்கை நெறியை தொடர்ந்தும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச சபைக்கு ஏற்கனவே வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினால் வழங்கப்பட்ட 05கணினிகளுடன் இன்றும்(17) திங்கட்கிழமை புதிய 05கணினிகள் வழங்குகின்ற நிகழ்வும் கணனி கற்கை நிலையத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வேள்ட்விஸன் நிறுவன கள நடவடிக்கைக்கான வலய முகாமையாளர் திரு.எ.அலெக்ஸ் பென்சமின், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு.கிருஸ்ணபிள்ளை, மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி. அருள்பிரகாசகம், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தி திட்ட  முகாமையாளர் திரு.ஜி.ஜே.அனுராஜ், நாவிதன்வெளி முகாமையாளர் பிரமசந்திரன், ஏறாவூர் முகாமையாளர் சுரேஸ் ஞானப்பிரகாசகம் திட்ட இணைப்பாளர்கள், மாணவர்கள் டேராகெற் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.