மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இரு உண்டியல்கள் உடைக்கப்பட்டுக் கொள்ளை


(சிவம்)

கிழக்கினில் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இரு உண்டியல்கள் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

ஆலயத்திற்கு முன்புள்ள குறிப்புப் புத்தகத்தில் கையொப்பமிட வந்த பொலிசார் கோயிலின் உள்ளே கேட்ட சத்தத்தையடுத்து முன்கதவை உடைத்துப் பார்த்தபோது திருடன் ஒருவர் உண்டியலைத் திருடிக்கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாகப் பிடிபட்டார் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் ஆலயத்தின் காவலாளியாக கடமைபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.