படையாண்டவெளி, பண்டரியாவெளி, கிராமத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை


(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக படுவான்கரைப் பிரதேசத்தில் பலகிராமங்களும், வயல்களும், வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆறுகளை அண்டிய கரையோரப்பிரதேசங்களில் வெள்ளநீர் ஊடறுத்துள்ளது. குறிப்பாக பண்டாரியாவெளி, படையாண்டவெளி கிராமம் வெள்ளத்தின் மிகவும் பாதிக்கப்பட்டு வீதிகளினால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் காணப்படுகின்றது.


தொடர்ச்சியாக இம்மழை  பெய்யுமாக இருந்தால் அக்கிராமத்தை விட்டு அம்மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுபோல அம்பிளாந்துறை கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.







அம்பிலாந்துறை கிராமம்

அம்பிலாந்துறை கிராமம்