லண்டனில் உயிரிழந்த மட்டக்களப்பை சேர்ந்த மாணவன்

லண்டனில் உதைபந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது  14 வயதுடைய தமிழ் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒந்தாச்சிமடம் கிராம மக்களை   சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் ஹரோவில் உள்ள வைட்மோர் உயர்நிலை பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவனான ஜெயக்குமார் சுஜிந்த் (வயது 14 ) என்ற மாணவனே கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தினை சேர்ந்தவர். தற்போது தனது குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வந்த நிலையிலேயே பள்ளிக்கூடத்தில் உதைபந்தாட்ட பயிற்சியில்  ஈடுபட்டிருந்த போது பந்து நெஞ்சில் அடிபட்டுள்ளது.

இந்நிலையில் அவர் நோத் விக் பார்க் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவத்தால்
கவலையளிப்பதாக ஆசிரியர்களும் சக மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.