வாகரைப்பிரதேச செயலகப்பிரிவில் 587 குடும்பங்கள் இடம்பெயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 587 குடும்பங்களைச் சேர்ந்த 1897 பேர் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் புல்லாவி பிரதேசத்தினால் வெள்ளநீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. 

அத்துடன் ஆண்டான்குளம் உடைப்பெடுத்துள்ளதனாலும் வாகரப்பிரதேசத்தில் வெள்ளம் பரவிவருவதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் நேற்று சனிக்கிழமை மலை வரை பெய்த கடும் மழை காரணமாக வாகரைப்பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் பாதிப்புக்குள்ளனானதாகவும், அனேகமானோர் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.