மட்டக்களப்பில் மீன்களும் அழுது கொண்டுதான் இருக்கின்றன: அரியம் எம்.பி


எதிர்வரும் 23,24ம் திகதி தபால்மூலமாக வாக்களிக்க வேண்டிய அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அதிபர், ஆசிரியர்கள் உட்பட தமிழ் பிரமுகர்கள் அனைவரும் ஆட்சி
மாற்றம் ஒன்றுக்காக வாக்களிக்க வேண்டும் என அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.
அம்பிளாந்துறையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கில் வாழும் நாம் கடந்த 65 வருடங்களாக சுதந்திரம் அற்றவர்களாக, அரசியல்தீர்வு இல்லாதவர்களாக அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
ஆயுதப்போர் கடந்த 2009 மௌனிக்கப்பட்டு ஐந்தரை வருடம் கடந்த நிலையிலும் நிம்மதியாக நடமாடமுடியாமலும் இறந்த உறவுகளுக்காக, ஒரு தீபம் கூடஏற்ற முடியாமலும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலும் காலத்தை ஓட்டுகின்றோம்.
இன்னும் சிறைகளில் ஏறத்தாள 500 தமிழ் அரசியல்கைதுகள் விடுதலை செய்யப்படாத நிலையிலும் சரண் அடைந்த முன்னால் போராளிகள் மீண்டும் கைதாகும் அவலமும் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
மட்டக்களப்புக்கு கடந்த 19ம்திகதி வருகை தந்த ஐனாதிபதி அவர்கள் 30 வருடத்திற்குப் பின் தற்போதுதான் மட்டக்களப்பில் மீன்பாடுவதாக கூறினார். அவருக்கு தெரியாது மீன்களும் இங்கு அழுதுகொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில்தான் ஐனாதிபதி தேர்தலுக்காக வாக்களிக்கக் போகின்றோம். இந்த தேரதலில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் மகிந்த அல்லது மைத்திரி இவர்களில் ஒருவரே வெற்றி பெறுவார்.
தற்போதைய நிலையில் பெரும்பாலானவர்கள் குடும்ப ஆட்சியை இல்லாமல்செய்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மைத்திரியின் சின்னமான அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து ஆட்சிமாற்றம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்படுகின்றனர்.
எம்மை பொறுத்தவரை ஆட்சிமாற்றத்தால் அரசியல் தீர்வு வராது என்பது உண்மை. ஆனாலும் அராஜகத்திற்கு மாற்று நடவடிக்கையாக இந்த கருத்தைசாதகமாக பரிசீலிக்க முடியும்.
அதேவேளை அரசதரப்பு அமைச்சர்கள் தொடக்கம் ஜனாதிபதி வரையும் வடகிழக்கு மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்றும் எம்மை இந்த நாட்டின் தீண்டாச்சரக்கு போன்றும் ஏளனம் செய்துவருவதை காணலாம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசாங்கம் இவ்வாறு ஒரம்கட்டுவதானது முழு தமிழ் இனத்தையும் அவமதிக்கும் செயல் என்பதை உணர்வுள்ள தமிழர்கள் உணர்ந்து கொண்டு தற்போதய ஐனாதிபதி மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதே எமது கருத்தாகும்.
அதற்காக "மைத்திரி பட்டு வேட்டி தருவார் என்று நாம் கூறவில்லை. எஞ்சி இருக்கும் கொமணத்தையாவது உருவாமல் பாதுகாக்க மாற்றம் ஒன்றுக்காக நாமும் வாக்களிப்பதுதான்" சிறந்த புத்திசாரூதியமாகும் என்பதை அனைவரும் குறிப்பாக புத்தியீவிகளும் மதப்பெரியார்களும் ஏற்றுள்ளனர். குறிப்பாக திருமலை மறைமாவட்ட பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களும் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு பல்வேறுபட்ட சமூகப் பெரியார்கள், சிவில் சமூக ஆர்வலர்களும் இக்கருத்துக்களை ஏற்றுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடாத்திய மக்கள் சந்திப்பில் ஒரு ஆட்சி மாற்றத்தை வடகிழக்கு மக்களும் விரும்புகின்றனர். இருந்தபோதும் இறுதி முடிவு தலைவர் சம்பந்தன் ஐயா அறிவிப்பார் என குறிப்பிட்டார்.
எதிர்வரும் 23,24ம் திகதி தபால்மூலமாக வாக்களிக்க வேண்டிய அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அதிபர், ஆசிரியர்கள் உட்பட தமிழ் பிரமுகர்கள் அனைவரும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களிக்க வேண்டும் என அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.
 அம்பிளாந்துறையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கில் வாழும் நாம் கடந்த 65 வருடங்களாக சுதந்திரம் அற்றவர்களாக, அரசியல்தீர்வு இல்லாதவர்களாக அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
ஆயுதப்போர் கடந்த 2009 மௌனிக்கப்பட்டு ஐந்தரை வருடம் கடந்த நிலையிலும் நிம்மதியாக நடமாடமுடியாமலும் இறந்த உறவுகளுக்காக, ஒரு தீபம் கூடஏற்ற முடியாமலும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலும் காலத்தை ஓட்டுகின்றோம்.
இன்னும் சிறைகளில் ஏறத்தாள 500 தமிழ் அரசியல்கைதுகள் விடுதலை செய்யப்படாத நிலையிலும் சரண் அடைந்த முன்னால் போராளிகள் மீண்டும் கைதாகும் அவலமும் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
மட்டக்களப்புக்கு கடந்த 19ம்திகதி வருகை தந்த ஐனாதிபதி அவர்கள் 30 வருடத்திற்குப் பின் தற்போதுதான் மட்டக்களப்பில் மீன்பாடுவதாக கூறினார். அவருக்கு தெரியாது மீன்களும் இங்கு அழுதுகொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில்தான் ஐனாதிபதி தேர்தலுக்காக வாக்களிக்கக் போகின்றோம். இந்த தேரதலில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் மகிந்த அல்லது மைத்திரி இவர்களில் ஒருவரே வெற்றி பெறுவார்.
தற்போதைய நிலையில் பெரும்பாலானவர்கள் குடும்ப ஆட்சியை இல்லாமல்செய்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மைத்திரியின் சின்னமான அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து ஆட்சிமாற்றம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்படுகின்றனர்.
எம்மை பொறுத்தவரை ஆட்சிமாற்றத்தால் அரசியல் தீர்வு வராது என்பது உண்மை. ஆனாலும் அராஜகத்திற்கு மாற்று நடவடிக்கையாக இந்த கருத்தைசாதகமாக பரிசீலிக்க முடியும்.
அதேவேளை அரசதரப்பு அமைச்சர்கள் தொடக்கம் ஜனாதிபதி வரையும் வடகிழக்கு மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்றும் எம்மை இந்த நாட்டின் தீண்டாச்சரக்கு போன்றும் ஏளனம் செய்துவருவதை காணலாம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசாங்கம் இவ்வாறு ஒரம்கட்டுவதானது முழு தமிழ் இனத்தையும் அவமதிக்கும் செயல் என்பதை உணர்வுள்ள தமிழர்கள் உணர்ந்து கொண்டு தற்போதய ஐனாதிபதி மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதே எமது கருத்தாகும்.
அதற்காக "மைத்திரி பட்டு வேட்டி தருவார் என்று நாம் கூறவில்லை. எஞ்சி இருக்கும் கொமணத்தையாவது உருவாமல் பாதுகாக்க மாற்றம் ஒன்றுக்காக நாமும் வாக்களிப்பதுதான்" சிறந்த புத்திசாரூதியமாகும் என்பதை அனைவரும் குறிப்பாக புத்தியீவிகளும் மதப்பெரியார்களும் ஏற்றுள்ளனர். குறிப்பாக திருமலை மறைமாவட்ட பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களும் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு பல்வேறுபட்ட சமூகப் பெரியார்கள், சிவில் சமூக ஆர்வலர்களும் இக்கருத்துக்களை ஏற்றுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடாத்திய மக்கள் சந்திப்பில் ஒரு ஆட்சி மாற்றத்தை வடகிழக்கு மக்களும் விரும்புகின்றனர். இருந்தபோதும் இறுதி முடிவு தலைவர் சம்பந்தன் ஐயா அறிவிப்பார் என குறிப்பிட்டார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmszCRVKajr2.html#sthash.CcJKN0Iv.dpuf