பெரியகல்லாறு 'ஏன்சல்ஸ்' பாலர் பாடசாலையின் கலை விழாவும் பட்டமளிப்பும்.

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு மெதடிஸ்த ஆலயத்தின் ஏன்சல்ஸ் பாலர் பாடசாலையின் கலை விழாவும்; பட்டமளிப்பும் மெதடிஸ்த மண்டபத்தில் அண்மையில் ஆலய குரு அருட்திரு எஸ்.சசிகுமார் ஆரம்ப ஜெபத்துடன் ஆரம்பமானது.
இவ் விழாவில் யுஎஸ்எயிட் பிராந்திய முகாமையாளர் எச்.ஜீவதாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பாலர் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு பட்டமளித்து கௌரவித்தது விசேடஅம்சமாகும்.

இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக டாக்டர் பி.றிச்சாட் தவோதரன், ஜெய்க்கா திட்ட பொறியியலாளர் எம்.மனோஜ்குமார் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக அன்றூ தேவாலய போதகர் எ.கமலகுமாரன், பூராணந்தசர்மா குருக்கள், ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியை திருமதி ஐ.ஆர்.லூயிஸ், ஆலய மேற்பார்வையாளர் கே.டி.கோகுல்ராஜ், வைஎம்சிஏ தலைவர் எ.அருள்ராஜ், பொது நுகாதார பரிசோதகர் வி.வேணிதரன், கிராம உத்தியோகத்தர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. அத்துடன சிறுவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் கண்காட்சியும் இடம் பெற்றது.