பிரதியமைச்சரால் துறைநீலாவணை மக்களுக்கு நூளம்பு வலை வழங்கிவைப்பு

(நடனம்,ச.தவேந்திரன்)

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் துறைநீலாவணைக் கிராம மக்களுக்கு நுளாம்பு வலைகள் கையளிக்கும் நிகழ்வு துறைநீலாவணை மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் வியாழக்கிழமை 18 நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலாளர் எம்.கோபாலரெட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் துறைநீலாவணைக்கிராம மக்களுக்கு 960 நுளம்புவலைகள் வழங்கிவைக்கப்பட்துடன் அம்மக்கள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்