சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சிலர் நாட்டிற்கு வருகை

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஆறு பேர் இதுவரை நாட்டை வந்தடைந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.


இந்தியா, பாகிஸ்தான், பங்காதேஷ், பூட்டான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்தே குறித்த கண்காணிப்பாளர்கள் வருகைதந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பற்காக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் 70 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய தேர்தல் அதிகாரிகளின் சங்கம். ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம், மற்றும் பொதுநலவாய தேர்தல் அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு தேர்தல்கள் செயலகம் உத்தேசித்துள்ளது.