சித்தாண்டியில் வெள்ளம் காரணமாக படகுச்சேவை ஆரம்பம்

(சித்தாண்டி நித்தி) உறுகாமகுளத்தின் வாண்கதவுகள் திறக்கப்பட்டதால் சித்தாண்டி சந்தணமடு ஆற்று நீர் மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக பெருமாவெளி இருந்து சித்தாண்டி வரைக்குமான படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இலுக்கு, பெருமாவெளி, ஈரளக்குளம், பெரியவட்டவான் மற்றும் இலாவாணை போன்ற பகுதிகளுக்குமான தரைவழி போக்குவரத்தை பிரதேச மக்கள் மற்றும் விசாயிகள் சந்தணமடு ஆற்றுப்பாதையுடாக மேற்கொண்டிருந்த நிலையில் வெள்ளநீர் உயர்வடைந்ததன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.


ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சந்திவெளி படகுப்பாதை மற்றும் மாவடியோடைப்பாலம் ஊடாக குறைந்தபட்ச போக்குவரத்தை மேற்கொண்டுவருகின்றனர். எனினும் வயல் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் அன்றாட நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் பெரும் ஆசோகரியத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.