கட்டார் விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு நபர் சாதனை!

(எஸ்.சதீஸ்)
கட்டார் நாட்டில் தேசிய தினத்தைஒட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் பல நாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு சாதனை படைத்துள்ளார்.


டோகா- கட்டாரில் அல்- றயான் விளையாட்டுக் கழகத்தினால் அண்மையில் இடம்பெற்ற தேசிய தின விளையாட்டுப் போட்டியில் கட்டார் நாட்டவர்கள் மற்றும் கட்டாரில் தொழில்புரியும் இந்தியா, பாக்கிஸ்தான்,பிலிப்பைன்ஸ், வங்காளதேஷ், நேபாளம், இலங்கை போன்ற நாட்டவர்கள் பங்குகொண்ட விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த வீரர் இரண்டு விளையாட்டுக்களில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு கருவேப்பங்கேணியைச் சேர்ந்த  விமலநாதன் மதிவதனன் (ராஜா ) என்பவரே இச் சாதனையினை படைத்துள்ளார்.

இவர் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தினையும், 200 மீற்றர் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று அந் நாட்டு பொதுத்துறை தலைமையினால் வழங்கப்பட்ட பணப்பரிசினையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.