மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு நடாத்தும் மண்டலப் பெருவிழா

(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு நடாத்தும் மண்டலப் பெருவிழா மட்டக்களப்பு நாவலடி, காயத்திரி ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

காலை கணபதி ஹோமம், அபிஷேகப் பூசை, பஜனை, ஐயப்பனின் மண்டலப் பூசை என்பன இடம்பெற்றது.

இப்பூசைகள் யாவும் நாவலடி காயத்திரி ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ.த.சாம்பசிவம் சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ.எஸ்.உதயன் குருக்கள் மற்றும் குருசுவாமிமார்களினாலும் நடைபெற்றதோடு, இதன்போது நாட்டின்; பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட ஐயப்ப சுவாமிமார்களினால் பெரியளவிலான பஜனை இடம்பெ;றது.

எனவே இதன்போது ஐயப்ப குருசாமிமார்கள், சாமிமார்கள், ஐயப்ப பக்த அடியார்கள் எனப் பலர் கலந்து கொண்டு மணிகண்டனின் அருளிளைப் பெற்றுக் கொண்டதுடன்,  ஏற்பாட்டுக் குழுவினரால் அன்னதானமும் வழங்கப்பட்டது.