பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா அண்மையில் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.முருகானந்தன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் கலந்து கொண்டார். அங்கு இடம் பெற்ற கலைநிகழ்வுகள் இவ்வார கலைக் களத்தை அலங்கரிக்கின்றது.