பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவில் இடம் பெற்ற கலை நிகழ்வுகள்

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா அண்மையில் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.முருகானந்தன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் கலந்து கொண்டார். அங்கு இடம் பெற்ற கலைநிகழ்வுகள் இவ்வார கலைக் களத்தை அலங்கரிக்கின்றது.

வரவேற்பு நடனமே அனைவரையும் வசீகரிக்க, பண்பட்டவர்கள் போல் பரத நாட்டியங்களை தனித்தனியாக ஆடி பரவசப்படுத்த,  குழு நடனங்களும் முழு திருப்தியளிக்க,  நாடகமும் தத்துவங்களை யதார்த்தமாக நிலை நிறுத்த, கலைச் சோலை ஒன்றில் உலா வந்த உணர்வை ஏற்படுத்திய கலை நிகழ்வாக அது அமைந்தது.