பழுகாமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

(பழுவூரான்)
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக களுவாஞ்சிகுடி - பழுகாமம் பிரதான வீதி வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகின்றது. தாழ்ந்த கரையோரத்தில் உள்ள பலமக்களின் வீடுகளினுள்ளே வெள்ளம் சென்றமையினால் சுமார் 200 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளினுள் பாதுகாப்பாக உள்ளனர். இதனை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். மக்களுக்கு சமைத்த உணவு வழங்குமாறு கிராம சேவையாளர்களுக்கு கூறியுள்ளார்.