இடம் பெயர்ந்துள்ள வெள்ளப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்நது பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் நேற்றைய தினம் இரவு சந்தித்து அவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கி உதவினார்.

நேற்றைய தினம் மாலை வீடுகளில் இருந்து இடம்பெயர்நதுள்ள மக்கள் தங்கியுள்ளசித்தாண்டி, சந்திவெளி, கிரான், உள்ளிட்ட பல இடங்களுக்கும் பிரதி அமைச்சர் விஜயம் செய்தார்.

அத்துடன், அவர்களது குறைகளைக் கேட்டறிந்ததுடன் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அத்துடன், மக்களுக்கு அவசரமாகத ;தேவையாகயிருந்த படுக்கை விரிப்புக்கள், போர்வைகள், குடிநீர் வகைகள், பால்மா, பிஸ்கட், அரிசி, மா, சமையல் பொருள்கள், புடவைகள் என பல்வேறு பட்ட பொருள்களையும் உடனடியாக விநியோகித்தார்.

சனிக்கிழமை இரவு கிரான் மகா வித்தியாலயம், சந்திவெளி, பாலையடித்தோணா ஆகிய பிரதேசங்களில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு இந்தப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.