பட்டிப்பளை பிரதேசத்தின் பல பகுதியில் வெள்ளம் (video)

(படுவான் பாலகன்) தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பல இடங்களில் வெள்ள நீர் ஊடுருவி உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை  விட்டு தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதுடன். பல மண்வீடுகளும் இடிந்து வீழ்ந்துள்ளது.


பிரதேசத்தில் பல வீதிகள் ஊடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் இருப்பதுடன். பல வீதிகளுடாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் போக்குவரத்தினை செய்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக பண்டாரியாவெளி, அம்பிளாந்துறை, மகிழடித்தீவு, முதலைக்குடா, கடுக்காமுனை போன்ற பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள கடுக்காமுனை குளத்தின் நான்கு வான்கதவுகளும் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது.

மண்முனை பாலத்தின் ஊடாக செல்கின்ற வீதியிலும் நீர் 3அடிக்கு மேல் செல்கின்றது. இதனால் மக்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.