மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று மாலை மூதூர், சம்பூர் கடற்பகுதியில் மூன்று பேருடன் குறித்த படகு கவிழ்ந்துள்ளதாகவும் அதிலிருந்த இருவர் நீந்தி கரை திரும்பியதாகவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த விபத்தில் காணாமல் போனவரை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து செயற்படுகின்றனர்.


கரையை வந்தடைந்த இரண்டு மீனவர்களும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.