மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் மகாத்மாகாந்தியின் 67 ஆவது சிரார்த்த தின நிகழ்வு

(சிவம்  ) மகாத்மாகாந்தியின் 67 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ. செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், மா. நடராசா, பிரசன்னா இந்திரக்குமார், ஞா. வெள்ளிமைல ஆகியோர் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தனர்.