தன் உயிரை காப்பாற்றியவரை 3 வருடங்கள் கழித்தும் பாசத்தோடு கட்டி அணைக்கும் சிங்கம் -Video


தென் ஆப்பிரிக்க காடுகளில் சுற்றித்திரியும் வன விலங்கு ஆர்வலரான வேலண்டின் க்ரூனர் என்பவர் மூன்று வருடங்களுக்கு முன் தனது பெற்றோரை விட்டு பிரிந்த  சிங்கக்குட்டி ஒன்றை பார்த்தார். வேட்டையாட தெரியாத அந்த குட்டி சிங்கத்திற்கு உணவளித்து, பின்னர் அந்த சிங்கத்தை தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் உள்ள வனவிலங்கு பராமரிப்பு அமைப்பிடம் ஒப்படைத்தார்.



அதிலிருந்து, சிர்கா என்ற அந்த பெண் சிங்கம் அவர் மீது பாசம் கொண்டது. ஒவ்வொரு முறை அவர் அந்த சிங்கத்தை பார்க்க கூண்டை திறக்கும் போதும் அது ஓடி வந்து அவரை கட்டி அணைக்கும். தற்போது மூன்று வயதை எட்டியுள்ள அந்த சிங்கம் தன்னை காப்பாற்றிய வேலண்டின் மீதான அதன் பாசம் மட்டும் குறையவே இல்லை. 140 கிலோ எடையுள்ள சிர்கா இப்போதும் வேலண்டினை பார்த்தால் பின்னங்கால்களால் எழுந்து நின்று கட்டிப்பிடித்து நட்பு பாராட்டுகிறது.

அப்படி கட்டிப்பிடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிர்காவின் முகம் ஒரு குழந்தையை பார்ப்பது  போல இருப்பதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.

2014ல் கூகுள் வலைதள தேடுதலில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் வேலண்டின் க்ரூனரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் இவருக்கும் சிர்காவுக்கும் இடையேயான நட்பு தற்போது ஆறு பாகங்கள் கொண்ட ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

"மனிதன விட இந்த சிங்கம் எவ்வளவோ மேல் "