அரசடித்தீவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தெளிவுபடுத்தல் கூட்டம்

(படுவான் பாலகன்) தமிழ் அரசு கட்சியின் அரசடித்தீவு கிளை
யின் ஏற்பாட்டில் தற்போதைய நாட்டின் நிலைமை தொடர்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நோக்கம் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவு படுத்தல் கூட்டமானது  இன்று(24) சனிக்கிழமை அரசடித்தீவில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான துரைராஜசிங்கம், பட்டிருப்பு தொகுதி தலைவர் சி.புஸ்பலிங்கம் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.










கொட்டும் மழையிலும் மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.