ஆயிரக் கணக்கானோர் கண்ணீர் மல்க ஆங்கிலக் கல்வியின் ஆசான் சரவணபவானின் பூதவுடல் அக்கினியில் சங்கமமாகியது


(சிவம்)
ஆயிரக் கணக்கானோர் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ( ஆங்கிலம்),பிரதிக் கல்விப் பணிப்பாளர் ( நிர்வாகம்) மற்றும் வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கல்விப் பணிப்பாளர் ( திட்டமிடல்) ஆகிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஆங்கில ஆசான் சிவசுப்பிரமணியம் சரவணபவானின் புதவுடல் இன்று காலை (29) கள்ளியன்காடு மயானத்தில் அக்கினியில் சங்கமமாகியது.

கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சமூக சேலையாளர்கள் என பல்துறை சர்ந்தோர் அன்னாரின் புதவுடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினர்.

கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவை நிறுவனத் தலைவர்கள் என பல்வேறுபட்டோர் இரங்கலுரையாற்றியனர்.

சுவிஸிலிருந்து சிவராம் ஞாபகார்த்தச் மன்ற உறுப்பினர் சண் தவராஜா அஞ்சலி பிரசுரம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.