வீதி விபத்தில் 50 பேர் காயம்

திருகோணமலை - ஹபரன பிரதான வீதியில் இனாமலுவ பிரதேசத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாரவூர்தியொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த அனர்த்த நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 35 பேர் தற்போது தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கேகாலையிலிருந்த கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.