மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதலாவது தடவையாக நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க எதிர்வரும் 27ம் திகதி வெள்ளிக்கிழமை விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக க.மோகன் (செல்லம்) தெரிவித்தார்.
க.மோகன் (செல்லம்) அழைப்பின் பேரில் விஜயத்தை மேற்கொள்ளும் நிதியமைச்சர் காலை 9 மணிக்கு வாழைச்சேனை கிண்ணையடி, பேத்தாழை பொதுமக்களினால் வரவேற்க்கப்பட்டதும் பின்னார் கிரான் முறக்கெட்டான்சேனை மக்களினால் வரவேற்பு நிகழ்வும் இடம்பெறயிருக்கின்றது.
அத்துடன் பல காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த களுவன்கேணிக்கான பிரதான போக்குவரத்து பாதைக்குரிய புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றது.
அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான விஜயமென்றை மேற்கொண்டதையடுத்து செங்கலடி வர்த்தக சங்கத்தினரால் வரவேற்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கோட்டமுனைப் பாலத்தில் இருந்து மாவட்ட செயலாளர் உட்ப்பட மாநகர ஆணையாளர் உதயகுமார், வருமான வரி ஆணையாளர் எம்.கணேஸ் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகளினால் வரவேற்க்கப்பட்டு மட்டக்களப்பு தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 2 மணிக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் கச்சேரியில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொள்ள இருப்பதாக க.மோகன் மேலும் தெரிவித்தார்.