கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

(எஸ்.சதீஸ்)
கல்குடா கல்வி வலயத்திலுள்ள மட்/கோரகல்லிமடு  ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 26ம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் என்.ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டிநிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.ரவி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் போன்றோர் உட்ட கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.