மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு ! கணவர் தலைமறைவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் வாகனேரி வாசியான செல்லான் புவனேஸ்வரி (வயது 30) என்ற குடும்பப் பெண்ணை அவரது கணவரே கட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.