அரச ஊழியர்களுக்கான விழா முற்பணம் 10 ஆயிரமாக அதிகரிப்பு

அரச  ஊழியர்களுக்கான  விழா   முற்பணம் ரூபாய்  5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்  ஜே. தடலஹே வினால்  மத்திய, அமைச்சுக்களின்  செயலாளர்கள் , மகாண  பிரதம செயலாளர்கள் மற்றும் தினைக்கள  தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசாங்க ஊழியர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம்  விழா முற்பணம் வழங்கப்பட்டு 10 மாத தவனை அடிப்படையில் மீள அறவீடு செய்யப்பட்டுவருகின்றது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி ரூபாய் 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 8 மாத தவணை அடிப்படையில் இந்த தொகை மீள அறவீடு செய்யப்படும் என  கூறப்பட்டுள்ளது.