அரச ஊழியர்களுக்கான விழா முற்பணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சின்
செயலாளர் ஜே. தடலஹே வினால் மத்திய, அமைச்சுக்களின் செயலாளர்கள் , மகாண
பிரதம செயலாளர்கள் மற்றும் தினைக்கள தலைவர்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே
அரசாங்க ஊழியர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் விழா முற்பணம் வழங்கப்பட்டு 10
மாத தவனை அடிப்படையில் மீள அறவீடு செய்யப்பட்டுவருகின்றது.
புதிதாக
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி ரூபாய் 10 ஆயிரமாக
அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 8 மாத தவணை அடிப்படையில் இந்த தொகை மீள
அறவீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.