(சமி) மண்டூர் கலை இலக்கிய அவையின் 20 வருட நிறைவைக் குறிக்கும் விசேட நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கலை இலக்கிய அவையின் தலைவர் எஸ்.புஸ்பானந்தன் தலைமையில் மண்டூர் தேசிகன் அரங்கு இராமகிருஷ்ண கலாச்சார மண்;டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது
அன்றைய நிகழ்வின் போது சமூக சேவையாளர்கள் கலைஇலக்கிய அவையினை நீண்டகாலமாக வழிநடத்தியவர் மற்றும் அவையின் 2014 இன் விருதுகளைப் பெற்ற சாதனையாளர்களை கௌரவித்தல் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றது. இன் நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றனர் மண்டூர் கலை இலக்கிய அவையினர்