கல்லடி ஹரி சிறுவர் இல்ல மாணவன் 8 அதி விஷேட சித்தியுடன் சாதனை

மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்தில் இருந்து கடந்து டிசம்பர் 2014ல் க.பொ.த(சா/த) பரீட்சைக்கு 04 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் செல்வன் ஞா.மங்களன் 8 'A' சித்திகளையும் ஆங்கிலத்தில் 'C' இனையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் சிறு வயதில் தந்தையை இழந்து, தரம் 4 இல் கல்வி கற்கும் போது இல்லத்தில் இணைக்கப்பட்டு சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

மேலும், இல்லத்தில் இருந்து க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றிய செல்வன் S.பிரவீன் 4A 3B 2C, செல்வன் P.செந்தூரன் 3A 3C 3S, செல்வன் J.யோகானந்தராசா 2A 2B 3C 1S இனையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் சீரான கல்வியில்லமால் தாய் தந்தை உறவுகளை இழந்த இச்சிறுவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றது பாராட்டுதலுக்குரிய விடயமாகும்.

மேலும், இல்லத்திலிருந்து 05 மாணவர்கள் கிழக்கு மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகின்றனர் என்பதுடன் விளையாட்டிலும் அகில இலங்கை ரீதியில் பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.