மனிதனையும், நாய்களையும் வேட்டையாடிவந்த முதலையொன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டு ஒப்படைப்பு

(  ஏ.எம் றிகாஸ்  )

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியிலுள்ள கோயில் தீர்த்தக்குளத்திற்குள்ளிருந்து மனிதனையும் நாய்களையும் வேட்டையாடிவந்த முதலையொன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டு 29.03.2015  வன சீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


இந்த முதலை சுமார் பத்து அடி நீளமானதாகும். 

இது  நாய்களை துரத்திக்கொண்டு மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தவேளை பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஏறாவூர்ப் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சித்தாண்டி முருகன் கோயில் மகோற்சவத்திற்கான தீர்த்தக்குளத்திற்குள்ளிருந்தாக கருதப்படும்  இந்த முதலை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நபர் ஒருவரை பலியெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

வன சீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த முதலையினை பல்வேறு  சிரமத்துடன் கட்டி கொண்டுசென்றனர்.