தேசிய நீர் வழங்கல் வடிகான் அமைப்பு சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

(கதிரவன் )
தேசிய நீர் வழங்கல் வடிகான் அமைப்பு சபை ஊழியர்கள் தமக்கு 4 வருடத்துக்கு ஒரு தடவை வழங்கும் 33 வீத சம்பள உயர்வை வழங்க கோரி அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றினை நாடு தழுவியதாக இன்று வெள்ளிக்கிழமை 27.03.2015 நடத்தினார்கள். திருகோணமலை பிராந்திய அலுவலக ஊழியர்கள் திருமலை கண்டி வீதியில் உள்ள தமது அலுவலகத்தின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.