அதிவேகமாகச் சென்ற வான் மோதியதில் ஓந்தாச்சிமடத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலி

(நேத்திரன்,சிவம்)
மட்டக்களப்பு – கல்முனை பிரதான விதியில் உள்ள ஓந்தாச்சிமடம் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த நகைத் தொழில் செய்யும் இரு பிள்ளைகளிக் தந்தையான சின்னத்தம்பி  கமலசேகரம் (ராசா) வயது (42) என்பவரே உயிரிழந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில் ஊர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு செல்லும் போது கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அதிவேகமாகச் சென்ற டொல்பின் ரக வான் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தின் சாரதி வானின் சாரதி வானை விட்டு தப்பி ஓடி பொலிசில் சரணடைந்துள்ளார். ஆத்திரமடைந்த மக்கள் குறித்த வேலை முற்றாக சேதமாக்கியுள்ளதோடு பதற்றம் நிலவியதால் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.