மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச விளையாட்டு விழா

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச விளையாட்டு விழா இன்று(27) வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இன்று காலை மரதன் ஓட்டப்போட்டியுடன் ஆரம்பித்த விளையாட்டு நிகழ்வானது அதன் பின் தோணி ஓட்டமும் இடம்பெற்றது. பிற்பகல் 02.00மணிக்கு ஒலிம்பிக் தீபம் ஏற்றல், 100மீற்றர் ஓட்டம், அஞ்சல், கயிறு இழுத்தல், உதைபந்தாட்டம், மிட்டாய் ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம்பெற்றது.

இதில் கயிறிழுத்தல் ஆண், பெண் இரண்டு போட்டியிலும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினர் வெற்றியீட்டியதுடன், உதைபந்தாட்ட போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ண அணியினர் முதலிடத்தையும், முதலைக்குடா விநாயகர் விளையாட்டுகழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றது.

இப் பிரதேசத்தில் இருந்து பல வீர, வீராங்கணைகள் தேசிய மட்டப்போட்டி வரைச் சென்று வெற்றியீட்டியிருக்கின்றனர். இது போன்று இலை மறை காயாக இருக்கின்ற பல வீர, வீராங்கணைகளின் திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வரும் நோக்கில் இப்போட்டி நிகழ்வுகளும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், உதவிதிட்டமிடல் பணிப்பாளர், பதவிநிலை உதவியாளர், உத்தியோகத்தர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேள்;ட்விஸன் நிறுவன பட்டிப்பளை யுனுP முகாமையாளர், பிரதேச வங்கிகளின் முகாமையாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி, பொதுமக்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.