வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

(தீரன்)
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கடந்த 15 நாட்களாக மேற்கொண்டு வருவதுடன் நேற்றையதினம் திங்கட்கிழமையும் கூரைமேல் ஏரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது தொழிலாளர்கள் சிலர் காகித ஆலையின் கூரையின் மேல் ஏறி நின்று ஆலையின்  முகாமைத்துவ நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள முடியாத படி நிர்வாகப் பிரிவுளின் கதவுகளைப் பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றும் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.