மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு


(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினால் வவுணதீவு பிரதேசத்தில் கண் பார்வை குறைந்தோருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.



மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.சசிதரன் அவர்களின் ஒழுங்கமைப்புக்கமைவாக, உளவளத்துணை மேம்பாட்டை உயர்த்தும் நோக்குடன் இப் பிரதேசத்திலுள்ள 24 பிரிவுகளுக்கும் இச் சேவை இடம்பெற்றது. 


இதன்போது, வசதி குறைந்த கண் பார்வைகுறைந்தோருக்கு வைத்தியரினால் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக  150 நபர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் மட்டக்களப்பு பெண்கள் ரயன்ஸ் கழகத்தின் தலைவி ஜெயப்பிரபா சுரேஸ்,செயலாளர்  ஞானப்பிரகாசம் சாந்தா, பொருளாளர் தனுஜா யூட் டிலக்சன் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
















\\\