இலங்கை வங்கி செங்கலடி கிளையின் 'நிதிசார் நிபுணத்துவம் 'எனும் கருத்தரங்கு

(S.ரகு) இலங்கை வங்கி செங்கலடி கிளையானது  இலங்கை மத்திய வங்கியுடன்  இணைந்து  அன்மையில்
'நிதிசார் நிபுணத்துவம் 'எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்றை  ஏற்பாடு செய்து இருந்தது.
இக்கருத்தரங்கானது சுயதொழிலில் ஈடுபடும் மகளிர்களை பயனாளிகளாக கொண்டு நடாத்தப்பட்டது

திரு ஸ்ரீபத்மநாதன்( செயற்திட்ட இணைப்பாளர் வறுமை ஒழிப்பு கடன் திட்டம் ,இலங்கை மத்திய வங்கி )
செல்வி சிந்தியா மார்டின் ( பிரதேச முகாமையாளர் -இலங்கை வங்கி மட்டக்களப்பு)
திரு செகராஜசிங்கம் (முகாமையாளர் இலங்கை வங்கி செங்கலடி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

திரு தேனுஜன் (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் இலங்கை மத்திய வங்கி) இன் ஒழுங்கமைப்பில்   இது
நடைபெற்றது இதன் போது பெண்கள் மத்தியில் பொருளாதார அபிவிருத்தி , நிதி சார் அபிவிருத்தி போன்ற விடயங்களை பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டமை முக்கிய அம்சமாகும் .