அங்கங்கள் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

(சுழற்சி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி வெம்புப் பகுதியிலிருந்து அங்கங்கள் சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை மாலை  மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உருக்குலைந்த நிலையில் காணப்படும் இந்த சடலம் 67 வயதுடைய ஏறாவூர் ஏ.கே.எம். வீதியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை அலியார் வெள்ளத்தம்பியினுடையது என்று உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இவர் சித்த சுவாதீனமுள்ளவர் என்றும் கடந்த 22 ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எல். முனாஸ் ஸ்தலத்திற்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாரைப் பணித்தார்.

பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.