மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் கூத்துப் பெருவிழா - இரண்டாம் நாள்

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் கூத்துப் பெருவிழா நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன் று (28-03-2015) நொச்சிமுனை சாரதா வீ தியில் அமைந்துள்ள EDS  விளையாட்டு மைதானத்தில் பி.ப 6.00 மணிக்கு நடைபெறுகின்றது.

ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு. தங்கராஜா மலர்ச்செல்வன்  (மாவட்ட கலாசார உத்தியோகத்தர்) அவர்களின் தலைமையில் நடைபெறும். இன்றைய நிகழ்வுக்கு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அம்மணி பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார்.


அண்ணாவியார் “சீனித்தம்பி” களரியில் நடைபெறும் இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வில்

(1) மட்டக்களப்பு கலைக்கோட்டன் கலைக்கழகம் வழங்கும் “ உத்தரை புலம்பல் ”

(2) முனைக்காடு இளைஞர்மன்றம் வழங்கும் “ நல்லதங்காள் ”

(3) ஆரையம்பதி ஆரையூர் கலாமன்றம்  வழங்கும் “ சுபத்திரை கல்யாணம் ”
                                              ஆகிய கூத்துக்கள் அரங்கேற்றப்பட உள்ளது.