கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு   கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்  2 வரை கல்குடா பொலிசார்;; வெள்ளிக்கிழமை (27) அதிகாலை  கைது செய்துள்ளதாக  கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக்க நவரெட்ன தெரிவித்தார்.

அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டில் போதைப் பொருள் ஓழிப்பு  நடவடிக்கையினை முன்னிட்டு மேற் கொள்ளப்பட்ட விஷேட வேலைத்திட்டத்தின் பிரகாரம் மேற்படி சந்தேக நபர்களும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கசிப்புடன் கூடிய கொள்கலன் மற்றும் கோடா போன்றவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்ட்ட சந்தேக நபர்கள் இருவரும் பெண்களாவார்கள் என்றும் கைப்பற்றப்பட்ட பொருட்க்கள் மற்றும் சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மண்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.